இரு பாடசாலை மாணவிகளிடம் மோசமாக நடந்துகொண்ட ஆசிரியருக்கு நேர்ந்த கதி!

 

tamil lk news

களுத்துறையில் இரண்டு பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கணித பாட ஆசிரியர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த கைது நடவடிக்கை நேற்று முன்தினம் (29-10-2024) இடம்பெற்றுள்ளதாக ஹொரனை பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


கொழும்பு பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.



ஹொரணை – வகவத்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் கணித பாட ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


கணித பாடத்தை கற்றுக் கொடுக்கும் போர்வையில் 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு மாணவிகளே துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.




மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்